जुआ

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.   (௯௱௩௰௧ - 931)
 

चाह जुए की हो नहीं, यद्यपि जय स्वाधीन ।
जय भी तो कांटा सदृश, जिसे निगलता मीन ॥ (९३१)

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.   (௯௱௩௰௨ - 932)
 

लाभ, जुआरी, एक कर, फिर सौ को खो जाय ।
वह भी क्या सुख प्राप्ति का, जीवन-पथ पा जाय ॥ (९३२)

உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.   (௯௱௩௰௩ - 933)
 

पासा फेंक सदा रहा, करते धन की आस ।
उसका धन औ’ आय सब, चलें शत्रु के पास ॥ (९३३)

சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்.   (௯௱௩௰௪ - 934)
 

करता यश का नाश है, दे कर सब दुख-जाल ।
और न कोई द्यूत सम, बनायगा कंगाल ॥ (९३४)

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.   (௯௱௩௰௫ - 935)
 

पासा, जुआ-घर तथा, हस्य-कुशलता मान ।
जुए को हठ से पकड़, निर्धन हुए निदान ॥ (९३५)

அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்.   (௯௱௩௰௬ - 936)
 

जुआरूप ज्येष्ठा जिन्हें, मूँह में लेती ड़ाल ।
उन्हें न मिलता पेट भर, भोगें दुख कराल ॥ (९३६)

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.   (௯௱௩௰௭ - 937)
 

द्यूत-भुमि में काल सब, जो करना है वास ।
करता पैतृक धन तथा, श्रेष्ठ गुणों का नाश ॥ (९३७)

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது.   (௯௱௩௰௮ - 938)
 

पेरित मिथ्या-कर्म में, करके धन को नष्ट ।
दया-धर्म का नाश कर, जुआ दिलाता कष्ट ॥ (९३८)

உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்.   (௯௱௩௰௯ - 939)
 

रोटी कपड़ा संपदा, विद्या औ’ सम्मान ।
पाँचों नहिं उनके यहाँ, जिन्हें जुए की बान ॥ (९३९)

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்.   (௯௱௪௰ - 940)
 

खोते खोते धन सभी, यथा जुएँ में मोह ।
सहते सहते दुःख भी, है जीने में मोह ॥ (९४०)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: ஸ்ரீ ரஞ்சனி  |  Tala: ரூபகம்
பல்லவி:
சூதினும் வறுமை தருவதொன்றில்லை - ஒரு
சுகமும் இல்லை துன்ப எல்லை

அநுபல்லவி:
தீதிதுவும் பொது மாதும் மதுவும் போல்
சிறுமை பல செய்து சீரழித்திடும்

சரணம்:
பகடை பன்னிரன்டு பாய்ச்சிகை உருண்டு
பாயும் தாயம் சீட்டாடுவார்
பண்பும் அற்றிட நண்பும் கெட்டிட
பணயம் வைத்திடக் கூடுவார்
மிகவும் ஒன்றெய்தி நூறிழப் பினும்
மீளும் நல்வழி காண்பரோ
மீண்டும் மீண்டுமே பொருளிழப்பார்
தூண்டில் மீன்களாய்ப் பரதவிப்பார்

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகியார்
கல்வி உணவுடைச் செல்வம் புகழ் நிறை
கருதும் ஐந்துமே அடைந்திடார்
அவல நிலையிலோர் கவளமாகிலும்
அருந்தியே பசி ஆறிடார்
ஆதலால் இந்தச் சூதின்மேல் வைத்த
ஆசையற விடுவீர்
குறளைத் தொடுவீர்
அருளைப் பெறுவீர்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22