शत्रुता- उत्कर्ष

வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.   (௮௱௬௰௧ - 861)
 

बलवानों से मत भिड़ो, करके उनसे वैर ।
कमज़ोरों की शत्रुता, सदा चाहना ख़ैर ॥ (८६१)

அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு.   (௮௱௬௰௨ - 862)
 

प्रेम रहित निज बल रहित, सबल सहाय न पास ।
कर सकता है किस तरह, शत्रु शक्ति का नाश ॥ (८६२)

அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.   (௮௱௬௰௩ - 863)
 

अनमिल है कंजूस है, कायर और अजान ।
उसपर जय पाना रहा, रिपु को अति आसान ॥ (८६३)

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.   (௮௱௬௰௪ - 864)
 

क्रोधी हो फिर हृदय से, जो दे भेद निकाल ।
उसपर जय सबको सुलभ, सब थल में, सब काल ॥ (८६४)

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது.   (௮௱௬௰௫ - 865)
 

नीतिशास्त्र जो ना पढे, विधिवत् करे न काम ।
दुर्जन निंदा-भय-रहित, रिपु हित है सुख-धाम ॥ (८६५)

காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.   (௮௱௬௰௬ - 866)
 

जो रहता क्रोधान्ध है, कामी भी अत्यन्त ।
है उसका शत्रुत्व तो, वांछनीय सानन्द ॥ (८६६)

கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை.   (௮௱௬௰௭ - 867)
 

करके कार्यारम्भ जो, करता फिर प्रतिकूल ।
निश्चय उसकी शत्रुता, करना दे भी मूल ॥ (८६७)

குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப் புடைத்து.   (௮௱௬௰௮ - 868)
 

गुणविहीन रहते हुए, यदि हैं भी बहुदोष ।
तो है वह साथी रहित, रिपु को है संतोष ॥ (८६८)

செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்.   (௮௱௬௰௯ - 869)
 

यदि वैरी कायर तथा, नीतिशास्त्र अज्ञात ।
उनसे भिड़ते, उच्च सुख, छोड़ेंगे नहिं साथ ॥ (८६९)

கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி.   (௮௱௭௰ - 870)
 

अनपढ़ की कर शत्रुता, लघुता से जय-लाभ ।
पाने में असमर्थ जो, उसे नहीं यश-लाभ ॥ (८७०)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: செஞ்சுருட்டி  |  Tala: ஆதி
கண்ணிகள்:
வலியார் பகையை விட்டே மெலியார் பகைமேற் கொள்ள
வழியிதை யார்க்கும் சொல்லும் பகை மாட்சி
பலி கொடுக்கா திருக்கப் பார்த்து வழி நடக்கப்
பயில் வதினால் சிறக்கும் தன்னாட்சி

அன்பிலன் ஆன்ற துணையிலன் தான் துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு கண்டீர்
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக் கறிவீர்

நீங்கான் வெகுளி நிறைஇலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்குமே எளிதாகும்
பாங்கினில் உறைந்தே தீங்கினைப் புரிபவர்
பகையைக் கொடுத்தும் கொள்ளல் இனிதாகும்

அறிவும் குணமும் இல்லார் அஞ்சும் இயல்புடையார்
அவர் பகை கொண்டால் இன்பம் தந்திடுமே
புரியும் வழியை நோக்கிப் பொல்லாப் பழியை நீக்கி
பொருந்திடச் செய்யும் திருக்குறள் நயமே




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22