सत्य

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.   (௨௱௯௰௧ - 291)
 

परिभाषा है सत्य की, वचन विनिर्गत हानि ।
सत्य-कथन से अल्प भी न हो किसी को ग्लानि ॥ (२९१)

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.   (௨௱௯௰௨ - 292)
 

मिथ्या-भाषण यदि करे, दोषरहित कल्याण ।
तो यह मिथ्या-कथन भी, मानो सत्य समान ॥ (२९२)

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.   (௨௱௯௰௩ - 293)
 

निज मन समझे जब स्वयं, झूठ न बोलें आप ।
बोलें तो फिर आप को, निज मन दे संताप ॥ (२९३)

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.   (௨௱௯௰௪ - 294)
 

मन से सत्याचरण का, जो करता अभ्यास ।
जग के सब के हृदय में, करता है वह वास ॥ (२९४)

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.   (௨௱௯௰௫ - 295)
 

दान-पुण्य तप-कर्म भी, करते हैं जो लोग ।
उनसे बढ़ हैं, हृदय से, सच बोलें जो लोग ॥ (२९५)

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.   (௨௱௯௰௬ - 296)
 

मिथ्या-भाषण त्याग सम, रहा न कीर्ति-विकास ।
उससे सारा धर्म-फल, पाये बिना प्रयास ॥ (२९६)

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.   (௨௱௯௰௭ - 297)
 

सत्य-धर्म का आचरण, सत्य-धर्म ही मान ।
अन्य धर्म सब त्यागना, अच्छा ही है जान ॥ (२९७)

புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.   (௨௱௯௰௮ - 298)
 

बाह्‍य-शुद्धता देह को, देता ही है तोय ।
अन्तः करण-विशुद्धता, प्रकट सत्य से जोंय ॥ (२९८)

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.   (௨௱௯௰௯ - 299)
 

दीपक सब दीपक नहीं, जिनसे हो तम-नाश ।
सत्य-दीप ही दीप है, पावें साधु प्रकाश ॥ (२९९)

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.   (௩௱ - 300)
 

हमने अनुसन्धान से, जितने पाये तत्व ।
उनमें कोई सत्य सम, पाता नहीं महत्व ॥ (३००)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: காமவர்த்தினி  |  Tala: ஆதி
பல்லவி:
வாய்மையைக் காப்பதே மாண்புடைமை - நம்
வண்டமிழ்க் குறள் சொல்லும்
இதன் அருமை பெருமை

அநுபல்லவி:
தூய்மையாய் உள்ளத்தைத் துலக்கிடும் வாய்மை
தோன்றும் நல்வாழ்க்கையிலே
சொல்லும் செயலுமாக

சரணம்:
பட்டம் பதவி பொருள் கிட்டும் என்றாலும்
பைம்பொன்னணி இழையார் பக்கம் வந்தாலும்
சுட்டுக்கொல்லும் துப்பாக்கி முன்பு நின்றாலும்
துன்பத்திற்கஞ்சாமலே துணிவும் கனிவும் கொள்ளும்

"பொய்யாமை பொய்யாமை யாற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்றென" முழங்குவோம்
பொய்யாமை யன்னதொர் புகழ்ச்செல்வம் உண்டோ
பொருந்தும் அறங்களெல்லாம் தருவதும் ஈதன்றோ




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22