Raga: இந்துஸ்தான்பியாக் | Tala: ரூபகம் கண்ணிகள்:உருவு கண்டெள்ளாதே - குறள்
உரைப் பதைத் தள்ளாதே
உருள் பெருந் தேர்க்குள்ள அச்சாணி போன்றவர்
உலகத்தில் உள்ளார் கண்டீர்
கல்லுக்குச் சிற்றுளி போல் - பெருங்
கதவுக்குத் தாழினைப் போல்
சொல்வினைக் குரியவர் சிறியவர் ஆனாலும்
சுடர் தரும் நல் விளக்காம்
வல்லமை பேசிடுவார் - வீணில்
வாய்வீச்சு வீசிடுவார்
"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்"
விண்ணில் பறந்திடலாம் - இம
வெற்பிலும் கொடி நாட்டலாம்
"எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்"
துன்பம் உறவரினும் - மனம
துணிந்து செயலாற்றினால்
இன்பம் பயக்கும் வினை மக்களாட்சியில்
என்றென்றும் போற்றப் பெறும்