Raga: அட்டாணா | Tala: ஆதி பல்லவி:ஈகை தரும் மெய்யின்பம் தமிழின்பம் அன்றோ
இன்பம் பெறவே உயிர்க்கிதனிலும் வேறுண்டோ
அநுபல்லவி:ஆகையினால் என்றும் ஈகையே வேண்டும்
அற்றார் அழிபசி தீர்க்க முன் தோன்றும்
சரணம்:ஏழை எளியவர்கள் படும் துயர்க்கிரங்கும்
இல்லையென்னாதளிக்கும் இயல்பு விளங்கும்
வாழும் முறைமை கண்டோர் மனத்துள்ளியங்கும்
வரும் பயன் குறிக்காத வண்மை துலங்கும்
"சாதலின் இன்னாததில்லை இனிதுதூ உம்
ஈதல் இயையாக்கடை" என்பதே குறளறம்
ஆதரவாம் இந்த அறிவுரை ஏற்போம்
அன்புறும் வாழ்க்கையிலே நாம் புகழ் சேர்ப்போம்