मिध्याचार

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.   (௨௱௭௰௧ - 271)
 

वंचक के आचार को, मिथ्यापूर्ण विलोक ।
पाँचों भूत शरीरगत, हँस दे मन में रोक ॥ (२७१)

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின்.   (௨௱௭௰௨ - 272)
 

उच्च गगन सम वेष तो, क्या आवेगा काम ।
समझ- बूंझ यदि मन करे, जो है दूषित काम ॥ (२७२)

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.   (௨௱௭௰௩ - 273)
 

महा साधु का वेष धर, दमन-शक्ति नहिं, हाय ।
व्याघ्र-चर्म आढे हुए, खेत चरे ज्यों गाय ॥ (२७३)

தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.   (௨௱௭௰௪ - 274)
 

रहते तापस भेस में, करना पापाचार ।
झाड़-आड़ चिड़िहार ज्यों, पंछी पकड़े मार ॥ (२७४)

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும்.   (௨௱௭௰௫ - 275)
 

‘हूँ विरक्त’ कह जो मनुज, करता मिथ्याचार ।
कष्ट अनेकों हों उसे, स्वयं करे धिक्कार ॥ (२७५)

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.   (௨௱௭௰௬ - 276)
 

मोह-मुक्त मन तो नहीं, है निर्मम की बान ।
मिथ्याचारी के सदृश, निष्ठुर नहीं महान ॥ (२७६)

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
முக்கிற் கரியார் உடைத்து.   (௨௱௭௰௭ - 277)
 

बाहर से है लालिमा, हैं घुंघची समान ।
उसका काला अग्र सम, अन्दर है अज्ञान ॥ (२७७)

மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.   (௨௱௭௰௮ - 278)
 

नहा तीर्थ में ठाट से, रखते तापस भेस ।
मित्थ्याचारी हैं बहुत, हृदय शुद्ध नहिं लेश ॥ (२७८)

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்.   (௨௱௭௰௯ - 279)
 

टेढ़ी वीणा है मधुर, सीधा तीर कठोर ।
वैसे ही कृति से परख, किसी साधु की कोर ॥ (२७९)

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.   (௨௱௮௰ - 280)
 

साधक ने यदि तज दिया, जग-निन्दित सब काम ।
उसको मुंडा या जटिल, बनना है बेकाम ॥ (२८०)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: தேவமனோகரி  |  Tala: ஆதி
பல்லவி:
வீணில் மயங்காதே - மனமே
வெறும் வெளித்தோற்றத்தில்
பெறும் மதியை இழந்தே

அநுபல்லவி:
காணும் சின்னங்கள் பூணும் அணிபணிகள்
மாணல்ல மனிதர்க்கு
மனத் தூய்மையே வேண்டும்

சரணம்:
வஞ்ச மனமுடையோர் பொய்யொழுக்கமானத்து
வானுயர் தவக்கோலம் கொண்டாலும் பயன் ஏது
நஞ்சினுமே கொடிய நெஞ்சிரக்கமில்லாதார்
நடிப்புத் துறவைக்கண்டே ஞானிகள் இவர் என்று

மறைந்து புதரில் வேடன் வலைவீசி நிற்பதுபோல்
வலிவு இல்லாத பசு புலித்தோலைப் போர்த்தது போல்
நிறைந்த சடை முடியால் நீண்ட தாடி அங்கியால்
கரந்துயிர் பிழைக்கின்ற கபடர்களை அணுகி

அம்பு நேராயினும் அதன் தன்மையோ கொடிதாம்
யாழின் கொம்புதான் வளைவாயினுமே இனிதாம்
அம்புவியில் இவைபோல் அவரவர் செயல் பண்பாய்
அமைவது காட்டும் குறள் அறிவு பெற்றே தெளிவாய்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22