अनसूयता

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.   (௱௬௰௧ - 161)
 

जलन- रहित निज मन रहे ऐसी उत्तम बान ।
अपनावें हर एक नर, धर्म आचरण मान ॥ (१६१)

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.   (௱௬௰௨ - 162)
 

सबसे ऐसा भाव हो, जो है ईर्ष्या- मुक्त ।
तो उसके सम है नहीं, भाग्य श्रेष्ठता युक्त ॥ (१६२)

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.   (௱௬௰௩ - 163)
 

धर्म- अर्थ के लाभ की, जिसकी हैं नहीं चाह ।
पर-समृद्धि से खुश न हो, करता है वह डाह ॥ (१६३)

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.   (௱௬௰௪ - 164)
 

पाप- कर्म से हानियाँ, जो होती है जान ।
ईर्ष्यावश करते नहीं, पाप- कर्म धीमान ॥ (१६४)

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது.   (௱௬௰௫ - 165)
 

शत्रु न भी हो ईर्ष्यु का, करने को कुछ हानि ।
जलन मात्र पर्याप्त है, करने को अति हानि ॥ (१६५)

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.   (௱௬௰௬ - 166)
 

दान देख कर जो जले, उसे सहित परिवार ।
रोटी कपडे को तरस, मिटते लगे न बार ॥ (१६६)

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.   (௱௬௰௭ - 167)
 

जलनेवाले से स्वयं, जल कर रमा अदीन ।
अपनी ज्येष्ठा के उसे , करती वही अधीन ॥ (१६७)

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.   (௱௬௰௮ - 168)
 

ईर्ष्या जो है पापिनी, करके श्री का नाश ।
नरक-अग्नि में झोंक कर, करती सत्यानास ॥ (१६८)

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.   (௱௬௰௯ - 169)
 

जब होती ईर्ष्यालु की, धन की वृद्धि अपार ।
तथा हानि भी साधु की, तो करना सुविचार ॥ (१६९)

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.   (௱௭௰ - 170)
 

सुख-समृद्धि उनकी नहीं, जो हों ईर्ष्यायुक्त ।
सुख-समृद्धि की इति नहीं, जो हों ईर्ष्यामुक्त ॥ (१७०)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: ஆபோகி  |  Tala: ஆதி
பல்லவி:
அழுக்காறடையாதே - நண்பா
அழுக்காறடையாதே

அநுபல்லவி:
"அழுக்காறென்பதே ஒரு பாவி
திருச்செற்றுத் தீயுழி உய்த்துவிடும்" அதனால்

சரணம்:
பொறாமை உள்ளவர் மனம் புகைந்திடும் கொள்ளி
புத்தியுள்ளோர் நகையாடுவர் எள்ளி
பெறாதிது நன்மதிப்பும் பெருங்குழி தள்ளி
பெருமை எல்லாம் கெடுக்கும் வறுமைநோய் அள்ளி

சஞ்சலமாகும் பொறாமையின் வீடு
சதிகாரர் நேசமே அவர்க்குடன்பாடு
கொஞ்சமோ இதனால் வந்திடும் கேடு
கூடாது இதைவிட்டே குறள்வழி நாடு




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22