பாம்பாட்டிக்குத் தொழில், பாம்பைப் பிடித்து, மகுடி வாசித்து, அதை ஆடவைத்து, மக்களிடம் காசு வாங்கி, வயிறு வளர்ப்பது. வேறு வழி இல்லாமல் பாம்போடு தான் அவன் கட்டுப்பட்டு இருக்கிறான். ஆனால், பயத்தோடு, ஆபத்துக்கும் உட்பட்டு வசிக்கிறான்.
அதுபோல, உள் பகை கொண்டிருக்கும் சுற்றத்தாரோடு வாழ்பவன் கட்டுப்பட்டு வேறு வழி இல்லாமல் அந்த குடும்பத்தில் வாழ்கிறான். ஆனால், சுற்றத்தாரின் உள்பகை எப்பொழுதும் கெடுதியை கொடுக்க கூடியது என்பதை உணர வேண்டும்.
(மனப் பொருத்தம் இல்லாத கணவன்- மனைவிக்கும் இது பொருந்தும்)