முயற்சி உள்ளவனிடம் வளர்ச்சி இருக்கும்.
சோம்பல் உள்ளவனிடம் வளர்ச்சி குன்றும்.
வாழ்வில் முன்னேறி இருப்பவன் முயற்சி உடையவன். கீழ்நிலை உடையவன் சோம்பல் உடையவன்.
அதுபோல், வறுமையையும், செல்வத்தையும் உணர்த்த, முறையே மூதேவி, சீதேவி என்று பெரியோர் கூறுவர்.
அதாவது "சோம்பல் உடையவன் தலையிலே மூதேவி குடியிருக்கிறாள். முயற்சி உடையவன் காலிலே சீதேவி அமர்ந்து இருக்கிறாள்" என்பார்கள்.
(சீதேவியை, திருமகள், தாமரையினாள் லட்சுமி என்றும் கூறுவார்கள்.)