காலநிலையை அனுசரித்து, எதை செய்ய வேண்டுமோ? அதை செய்ய வேண்டும்.
இளமை காலத்தில் செய்ய வேண்டுவது வேறு முதுமைக் காலத்தில் செய்ய வேண்டுவது வேறு.
எப்படி என்றால், இளமையில் கல்வி கற்பது பாலியத்தில் உத்தியோகம் பார்ப்பது அல்லது வியாபாரம் செய்து பணம் சம்பாதிப்பது, இல்வாழ்க்கை இன்பம் நுகர்வது; முதுமையில் ஓய்வு பெறுவது அல்லது துறவு நிலை அடைவது.
இவ்வாறு வாழ்க்கையை சீராக அமைத்துக் கொண்டால், செல்வம் சிதறிப் போகாமல் சேர்ந்து கெட்டியாக கட்டி வைக்க உதவும் கயிறு போன்றது.