போர் வீரர்களில் ஒருவன், தேசப்பற்று கொண்டு, போர் முனைக்கு செல்கிறான். அந்த வீரனுடைய கடமையானது, போரில் வெற்றி அடைந்து, நாட்டுக்கு பெருமை உண்டாக்கி, பாதுகாப்புக்கு நிலையான தன்மை ஏற்படுத்துகிறது. (ஒருகால், அவனுக்கு தோல்வி ஏற்படுமானால் நாட்டுக்கு சிறுமையையும் அழிவையும், பழியையும் தருகிறது).
அதுபோல, ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்தவனின் விடா முயற்சியினாலும், அறிவினாலும் அந்த குடும்பத்தின் பொறுப்பை ஏற்று நிர்வகித்து குடும்பத்தின் பெருமையை நிலை பெறச் செய்யும் திறமை உள்ளவன் ஆகிறான். (ஒருவேளை அவன் சோம்பேறியாகவும், அறிவு இல்லாதவனாகவும் இருப்பானாகில், குடும்பத்தின் பெருமை அழிந்து பழி சேரும்.)
"பெரிய குடும்பத்தில் பிறந்தவனுக்கு அவ்வளவு பொறுப்பும் பாரமும் உள்ளது" என்பது கருத்து.