ஊரில் உள்ள குளத்தில்- ஊருணியில் நீர் நிறைந்து இருந்தால், ஊர் மக்கள் அதைத் தாராளமாக எடுத்து பயன்படுத்திக்கொள்வார்கள். அதுபோல, பொதுமக்களின் நன்மைக்காக, அறிவு உடையோரின் செல்வம் பொதுச்சொத்துப்போல், உலகத்தாருக்குப் பயன்படும்.
அறிவு உடையவர்கள் மக்களுக்கு உதவுவதே, தங்கள் கடமை என்று உணர்ந்தவர்கள். ஆகையால், செல்வம் சுருங்கியபோதும், உதவி செய்யத் தளரமாட்டார்கள். நீரைப் பயன்படுத்தும் மக்கள் குளத்தைப் பாதுகாப்பது போல், செல்வத்தின் பயனை பெற கருதுபவர்கள், செல்வம் உடைய அறிவாளரைப் போற்றி பாதுகாப்பார்கள்.
"அறிவுடையோரிடம் செல்வம் செய்வது எப்படி என்றால், குளத்தில் நீர் நிறைந்து இருப்பது போல என்றும் கொள்ளலாம்."
(அறிவுடையோரின் செல்வம், தம் ஊர் அளவிலும் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், தேசம் அளவிலும் பயன்பட்டு வருவதை அறிந்துள்ளோம்).