மணனம் பிறழாமல், எத்தகைய காரியமானாலும், பாரபட்சமில்லாமல் நடுநிலைமையோடு, நியாயமாக நடந்து கொள்பவர் யார்? எப்படி?
ஒரு பொருளை, அதன் எடைக்கு சமமாக தூக்கி நிறுத்தி காட்டுகிறது தூக்குக்கோல் என்னும் தராசு.
அதுபோல, எந்த காரியத்திலும், எவரிடத்திலும் நடுநிலைமை பிறழாமல், நடந்து கொள்வதே சான்றோருக்கு புகழ் தரும்.
(இக்காலத்தில், நீதிபதிகளும், ஊர் பஞ்சாயத்தார்களும் நீதி வழுவாது, தீர்ப்பு வழங்குவது புகழ் தரும்).
(வியாபாரிகள் தராசில் கள்ளத்தனம் செய்யாமலும், நியாயவிலை கடைகள், கூட்டுறவு நிலையங்கள் எடையில் மோசடி செய்யாமலும் நடந்து கொண்டால் பொது மக்கள் பாராட்டுவார்கள்).