ஒருவருடைய வாழ்நாளில் துன்பம் நேரிடுமானால், அது வராமல் தடுப்பது எப்படி?
உண்பதும், உறங்குவதும் சுகிப்பதும் விளையாடுவதுமாக, வீண் பொழுது போக்காமல், நாள்தோரும் நல்ல செயல்களை செய்துவருகின்றவனுக்கு துன்பம் வருமேயானால், அவனுடைய நல்ல செயல்கள், துன்பத்தின் வழியை அடைக்கும் கல் போல அமையும்.
அடைக்கும் கல் என்பதை அடைக்கும் கதவு என்றும் கொள்ளலாம்.
ஒருவன் செய்யும் நல்ல செயல்கள், அவனுக்கு உண்டாகக் கூடிய துன்பத்திலிருந்து அவனை காப்பாற்றும்.