Raga: விஜயநாகரி | Tala: ஆதி பல்லவி:வாழ்க்கையிலே புகழ் சேர்க்கை இல்லாதவர்
வாழ்ந்தும் பயன் என்னடி பாங்கி
அநுபல்லவி:ஏழ்கடல் வைப்பினும் இசைமணமே கமழ
ஈகையினால் உயர்ந்தே
வாகை புனைந்த நாட்டில்
சரணம்:மாரிபோல் வழங்கிய பாரிகுமண வள்ளல்
வாழ்ந்த தமிழகத்தில் மதிக்கப் பிறந்திருந்தும்
ஓரிதமும் செய்யாதார் ஒருவர்க்கும் இட்டுண்ணாதார்
பாரிடத்தின் சுமையாய்ப் பயன்விளையா நிலமாய்
"ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியமே இல்லை உயிர்க்" கென்பதாகவே
ஓதும் திருக்குறள் அறம் புரிவோரே
ஓங்கும் புகழ் பெறுவார் தாங்கும் நல்வாழ்வுறுவார்