避免行乞

கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்.   (௲௬௰௧ - 1061)
 

縱有仁人長者, 樂善好施, 而亦不向其乞求者, 賢於乞求者千萬倍矣. (一千六十一)
程曦 (古臘箴言)

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில்.   (௲௬௰௫ - 1065)
 

薄粥雖稀如水, 若係以勞力汗水換來者, 其甘美無物過之. (一千六十五)
程曦 (古臘箴言)

இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று.   (௲௬௰௭ - 1067)
 

吾有一事求他人: 若人必須乞食, 莫向吝嗇之人乞求. (一千六十七)
程曦 (古臘箴言)

இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.   (௲௬௰௯ - 1069)
 

乞求之念在心, 卽使可償所願, 其心已軟化, 若一思及見拒之情, 其念將歇. (一千六十九)
程曦 (古臘箴言)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: ஜோன்புரி  |  Tala: ஆதி
பல்லவி:
இரந்தும் உயிர் வாழ்வதா?
இரவச்சம் சூழ்வதா?

அநுபல்லவி:
இறைவா நின் படைப்பில் இந்த
இழி நிலையும் காண்பதா

சரணம்:
கரவாமல் உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடிபெரும் என்றே அறிந்த பின்னும்

மானம் கெடுமோ என்று மனத்தினில் அச்சம் கொண்டு
தானத்திலே இரங்கி ஈனத்தை ஏற்க நின்று

வாழும் வழியற்றாலும் சூழும் நிலை கெட்டாலும்
தாழும்படி இரவாச் சால்பே உலகின் மேலாம்

பாவிகளைப் புகழ்ந்து பாடியும் பயன் என்னவோ
ஆவிற்கு நீர் என்றாலும் நாவிற்கிழி வல்லவோ

தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினியதில் வெனும் குறள் உணர்ந்தும்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22