இந்த உலகத்தில் ஒருவன் வாழுகின்ற வரையிலும், அதற்குப் பிறகும் நீடித்து இருக்கக்கூடியது எது?
புகழே ஆகும்!
அந்தப் புகழ் எப்படிக் கிடைக்கும்?
மனிதன் தன்னுடைய கூட்டுறவு வாழ்க்கையில் எவ்வளவு மக்களுக்கு எத்தகைய உதவிகளை செய்கிறானோ, அத்தனை பேர்களுடைய உள்ளத்திலும் அவன் மறக்கமுடியாமல் வீற்றிருந்து வாழ்வான்.
இன்ப நலனை நுகர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தேவர்களை போற்றாமல் மக்களுக்கு ஈகை புரிந்தவனையே தேவலோகம் போற்றும்.
"இந்தப் பூமியில் இருக்கும் வரையிலும் புகழ் நீடித்து இருக்கும்" என்றும் சொல்லலாம்.