கொள்ளைக்காரன் கையில் கத்தியை வைத்துக்கொண்டு, வழியில் போவோர் வருவோரை மிரட்டி, கொள்ளை அடிக்கின்றான்.
அதுபோல், ஆட்சிக்கு உரிய செங்கோலை பிடித்து கொண்டு மன்னன் நாட்டு மக்களை துன்புறுத்தி, கசக்கிப் பிழிந்து, கெடுபிடியோடு வரி வசூலிப்பது கொடுமை. (வழிப்பறிக் கொள்ளைக்காரன் செயலைப் போன்றது.)
தங்கள் வருவாய்க்கு தக்கவாறு வரி செலுத்த வேண்டியது மக்கள் கடமை ஆகும்.