காகம் உணவுப்பொருளை காணும்பொழுது, கா, கா எனத் தன்னுடைய இனத்தை கூவி அழைத்து, சேர்ந்து பகிர்ந்து மகிழ்ந்து உண்ணும்.
அதுபோல, மனிதனும் தன் சுற்றத்தாருக்கு மகிழ்வோடு உணவு முதலியவற்றை வழங்கி இன்புற வேண்டும். அதனால், அவனுக்கு அறமும், இன்பமும் பெருகுவதோடு, செல்வத்தை பெருக்கவும் வழி உண்டாகும்.
அத்தகைய சிறப்புடையோருக்கு, புகழும், பெருமையும் சேரும்.