ஒருவன் எதற்காகவோ, இன்னொருவனுக்கு தீங்கு செய்துவிட்டான்.
அதற்காக பாதிக்கப்பட்டவன் திருப்பி தீங்கு செய்து, (பழிக்குப்பழி) வாங்கிவிடுவதால், அப்போதைக்கு திருப்தி உண்டாகும்.
குரோதம், மேலும் மேலும் வளர்ந்து கொண்டே போகும். அதற்கு முடிவே இருக்காது.
ஆனால், அப்படி திருப்பித் தீங்கு செய்தவனை, நல்லவர்கள் மதிக்க மாட்டார்கள். அவனிடம் அனுதாபம் காட்ட மாட்டார்கள்.
தீமை செய்தவனுக்கு திரும்ப தீமை செய்யாமல் பொறுமையோடு, அவனை மன்னித்துவிட்டால், அவனைப் பொன்போல் மதித்து எல்லாரும் போற்றுவார்கள்.