இராகம்: சாரமதி | தாளம்: ஆதி பல்லவி:வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர் சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல் ஆனதே
அநுபல்லவி:நாளெத்தனை அவர் வயின் விதும்பல்
நன்மை காணுமோ உண்மை தோணுமோ
சரணம்:வெற்றியை விரும்பி ஊக்கமே துணையாய்
வெளிநாடு சென்றார் விரைந்தே வருவார்
பற்றியே கண்ணாரப் பருகினா லன்றோ
பசலை நோயும் நீங்கும் பாவை உயிர் தாங்கும்
மரமேறியேனும் வழி பார்த்திருக்கும்
பறவை போல உள்ளம் பறக்கும் துடிக்கும்
ஒருநாள் நெடுநாள் போலவே கழியும்
வருநாளில் காதல் இன்பத் தேன் பொழியும்