உருவத்தில் மிகச் சிறியது அச்சாணி, ஆனால் உறுதி வாய்ந்தது.
உருண்டு ஓடக் கூடிய பெரிய தேருக்கு, அந்த அச்சாணி மிகவும் ஆதாரமானது. அது இல்லையானால், தேர் ஓடாது.
காண்பவர்கள் தேரைக் கண்டு மகிழ்வார்கள். ஆனால் அந்த அச்சாணியின் முக்கியத்துவத்தை அறிய மாட்டார்கள்.
அதுபோல, ஒருவர் உருவத்தில் சிறியவராய், எளியவராய் இருக்கிறாரே என்று நினைத்து அவரை இகழக்கூடாது.
அவருடைய அறிவையும், புத்திக் கூர்மையையும், திறமையையும் மதித்து போற்ற வேண்டும்.
(அச்சாணியைக் கடையாணி என்றும் கூறுவார்கள்).