மழை பெய்யவில்லை என்றால் உலகில் வாழும் உயிர்கள் அனைத்தும் சிறுகச் சிறுக அழிந்துபோகும். பயிர்களும் வாடி வதங்கி அழியும். மக்களுக்கு எவ்வளவு துன்பங்கள் உண்டாகுமோ, சொல்லமுடியாது.
அதுபோல, நேர்மையற்ற அரசின் ஆட்சியில் வாழுகின்ற மக்களும் தினமும் வருந்திச் சிறுகச் சிறுக அழிந்துப் போவார்கள்.
அரசு முறை தவறுமானால், எல்லா வகையாலும் எல்லாருக்கும் அழிவு உண்டாகும்.