ஐந்து புலன்களை, அடக்கி ஆள்பவர் பெருமைக்கும், புகழுக்கும் உரியவர். ஆற்றல் மிக்கவர், புலன்களை கட்டுப்படுத்த இயலாதவர் நிலைமை என்ன ஆகும்? அதற்குச் சாட்சி வேண்டுமானால், தேவர்களின் அதிபதியான இந்திரன் ஒருவனே போதும்.
ஐந்து புலன்களை அடக்கி, மெய்யறிவு பெற்றவர் கௌதம முனிவர்; அவருடைய மனைவி அகல்யை. இந்திரன் காமவசமாகி முனிவரின் மனைவியை கள்ளத்தனமாக கூடிச் சுகித்தான்.
அதை அறிந்த முனிவர் இந்திரனை சபித்தார். சாபம் பெற்ற இந்திரன் அவமானம் அடைந்தான். ஐந்து புலன்களையும் அவன் கட்டுப்படுத்த முடியாததனால் உண்டான துன்பம்.
(வள்ளுவர் காலத்திலேயே, புராணக் கதைகள் இருந்திருக்கின்றன என்பது தெரியவருகிறது).
ஐந்து புலன்கள் என்பவை; மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியன. ஐம்புலன், ஐம்பொறி என்றும் கூறுவார்கள்.