வீரம் இல்லாதவன் கையிலே உள்ள வாளானது அவனுக்கு பயன்படாது. பகைவனை கண்ட உடனே பயம் உண்டாகி தன் கையில் உள்ள வாள் நழுவி விழுந்து விடும். அதனால் அவன் கொல்லப்படுவான்.
அதுபோல, விடா முயற்சி இல்லாதவன், பலருக்கு உதவி செய்ய எண்ணுவதும் ஆகும். விடா முயற்சி இல்லாதவன் பிறருக்கு உதவி புரிந்து கொண்டிருப்பானாகில் தன் பொருள் அழிந்து, தானும் அழிவான்.
தொழில் திறமை இல்லாதவனிடம் பொருளும், அதிகாரமும் இருக்குமானால், அவற்றைக் கொண்டே அவனுடைய எதிரிகள், அவனை பயமுறுத்தி, தங்கள் காரியத்தை நிறைவேற்றிக் கொள்வார்கள் என்று அறிவுறுத்துகிறது.