O poddawaniu próbie kandydatów do urzędu

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சிந்துபைரவி  |  Tala: கண்ட ஆதி
கண்ணிகள்:
தெரிந்து தெளித்தலே நன்று - நாட்டின்
தேவைக்கு யார்மிகத் தக்கவர் என்று
விரிந்துள்ள மக்களின் தொகுதி - நன்மை
வேண்டியே பொறுப்பேற்க வருவோரின் தகுதி

ஆட்டுக்குக் காவல் ஓநாயா - கிளி
அன்புக்குப் பாலூட்டப் பூனைதான் தாயா
கேட்டுக்கு வழி தேடலாமா - நம்
கிளை யென்றே மாற்றானைக் கொண்டாடலாமா

பணமே படைத்தோன் என்றாலும் - அன்றி
படித்தவன் அன்புள்ள நண்பன் நின்றாலும்
குணம் நாடிக் குற்றமும் நாடி - அவற்றுள்
மிகை நாடி மிக்க கொள்வோம் குறள் நாடி

பழிக்கஞ்சி நாணிடும் தன்மை - பொருள்
பாவையர் மயக்கிலும் வீழாத வன்மை
அழியினும் உயிருக் கஞ்சாமை - உள்ள
அறங்கூறும் வினையாளன் ஆட்சிக்கு மேன்மை

பொன்னை உரைப்பது கல்லே - மனிதன்
தன்னை உரைப்பதும் அவன் செயல் சொல்லே
முன்னை ஆராய்ந்தவ னிடமே - ஐயம்
மோதாமல் நம்பிக்கை கொள்வதும் நலமே




Rozdział popularny

Popularna para

Powtarzające się słowo w parach
Najczęściej powtarzane słowo w Thirukkural.
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Powtórzone słowo w parze Zaczynając od nowa
Najpopularniejsze pierwsze słowo w "Parach".
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Powtórzone słowo w koñcu kończ¹cym zwi¹zek
Najpopularniejsze słowo "Ostatnie słowo w parach".
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22