கட்டம் போடாமல், தாயம் ஆடமுடியாது. ஏனென்றால் எந்தக் காயை எங்கே வைப்பது, எதற்காக வைப்பது என்பது புரியாது.
அதுபோல, நூல்களைப் படிக்காத - கல்வி அறிவு இல்லாதவன் அறிஞர்கள் கூடியுள்ள சபையில் பேச முடியாது. அறிவு பெறாதவன் என்ன சொல்ல முடியும்? எதைப் பற்றி கூற இயலும்?
(அரங்கு அமைத்து ஆடுவதில், தாயத்தோடு சொக்கட்டான், சதுரங்கம் போன்ற விளையாட்டுகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.)