வறுமையில் வாடி துன்பத்துக்கு ஆளானவர், பணக்காரர் உடைய வாசலில் போய் நின்று தன் ஏழ்மையைக் கூறிக் கெஞ்சிக் கையேந்தி உதவி பெறுகிறார்.
அதுபோல, படிப்பறிவு இல்லாதவர், கற்று அறிந்த அறிவுடையார் முன் சென்று வணக்கத்தோடு பணிந்து நின்று கல்வி அறிவை பெற வேண்டும். அதுவே சிறப்பாகும். அப்படி கற்றுக் கொள்ளாதவர் தாழ்ந்தவரே.
செல்வத்தைவிடக் கல்வி மிகவும் முக்கியம். பொருள் கொடுத்தோ பணிந்து நின்றோ தொண்டு புரிந்தோ எவ்வழியிலாயினும் கல்வி பெறவேண்டும்.
அழிந்து போகக்கூடிய செல்வத்தைச் சம்பாதிக்க பாடுபடுவது போல, அழியாச் செல்வமான கல்வியை பெறுவதற்கு முயற்சி செய்யவேண்டும்.
கற்றவருக்கு உயர்வு; கல்லாதவர்க்கு தாழ்வு.