நெருப்புக்குச் சேர்ந்தாரைக் கொல்லி என்னும் ஒரு பெயர். அது காரணப் பெயர் என்று கூறுவார்கள்.
ஒரு பொருளை தீண்டிய நெருப்பானது, அந்தப் பொருளையும் அழித்துத் தானும் இல்லாமல் அழிந்து விடுகிறது. அதனால் அது சேர்ந்தாரைக் கொள்ளக்கூடியதாக ஆகிறது.
அதுபோல, நெருப்பினும் கொடுமையான கோபம், ஒருவனுக்கு ஏற்படுமானால், அவனை மட்டுமல்லாமல், அவனுக்கு சுற்றத்தாராய் நின்று, துன்பக் கடலிலிருந்து அவனைப் பாதுகாக்கும் தெப்பம் போன்ற அவனுடைய சுற்றத்தாரையும் சுட்டு எரித்துவிடும்.
அதாவது அவனிடமிருந்து கோபமானது அவர்களை விலக்கிவிடும்.
ஆகவே, கோபம் கொள்பவனுக்குப் பாதுகாப்பு (துணை) என்பதே இல்லாமல் போய்விடும்.