மீன் பிடிப்பவன் ஆற்றில் அல்லது குளத்தில் தூண்டில் போடுகிறான்.
அந்தத் தூண்டில் முள்ளில் இருக்கிற இரையை, உணவு என்று எண்ணி ஏமாந்து, மீன் கவ்வும்போது, மீன் பிடிப்பவன் மீனையே இழுத்துப் பிடித்துவிடுகிறான். மீன் சிக்கிக் கொள்கிறது.
அதுபோல, சூதாட்டத்தினால் ஒருவன் வெற்றி பெற்று பொருள் பெறும் போது, சூதாடிகள், அந்த வெற்றியையே காரணமாக காட்டி, அவனை உற்சாகப்படுத்தி அவனுடைய பொருள் எல்லாவற்றையும் கவர்வதற்காக, அவனை இழுப்பார்கள்.
சூதாடி, முதலில் வெற்றி பெற்று சிறிது அளவு பெறலாம். ஆனால் பிறகு பல மடங்கு இழக்க வேண்டி இருக்கும். இதுவே சூதாடிகளின் வாழ்வு! அவர்கள் ஒருபோதும் சூதினால் நன்மை பெற்று வாழ வழியே கிடையாது. எனவே, சுதை விரும்பவே கூடாது.