ஒரு செம்பில் வைக்கப்பட்ட பொருள் கொட்டிவிடாமல் சிதறி விடாமல் இருப்பதற்காக, மூடியால் அதை மூடி வைக்கிறோம்.
அதனால் சிம்பு மூடியும் பொருந்தி இருப்பது போல் வெளியே தோன்றுகிறது.
ஆனால், இரண்டும் தனித்தனியே பிரிய கூடியவையே.
அதுபோல, மனப் பகை கொண்ட குடும்பத்தினர், உறவோடு இருப்பதுபோல் வெளியே காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் ஒற்றுமை இருக்காது.
சந்தர்ப்பம் வரும்போது, பிரிந்து விடுவார்கள்.
இந்தக் கருத்து நண்பர்களுக்கும் பொருந்தும்.
(செம்பு, செப்பு, சிமிழ் என்றும் கூறுவர்)