உறுதியான அச்சும், வலிமையான சக்கரங்களும் கொண்ட உயரமான தேர் கடலில் ஓடமுடியாது.
கடலில் ஓடுகின்ற மரக்கலம் (கப்பல்) தரையில் ஓடாது.
அதுபோல, எதிரியை வெல்ல நினைப்பவர், வெற்றி பெறுவதற்கான இடத்தில், பயன் தரக்கூடிய கருவிகளை- சாதனங்களை பயன்படுத்த வேண்டும்.
எத்தகைய வலிமை இருந்தபோதிலும், இடம் சரியாக அமையாவிட்டால் காரியம் பாதகமாக முடியக்கூடும்.