பகல் நேரத்தில் கோட்டானுக்குக் கண் தெரியாது. அதனால், கோட்டானைக் காக்கை வென்றுவிடும்.
இரவு நேரத்தில் காக்கைக்கும் கண் தெரியாது. அதனால் இரவு நேரத்தில் காக்கையை கோட்டான் வென்றுவிடும்.
கால மாறுதலால் ஒன்றை மற்றொன்று வெல்ல வாய்ப்பு ஏற்படுகிறது.
பலைவனை முறியடிக்க கருதும் அரசன் சாதகமான காலத்தை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டும்.
சாதகமான காலம் என்பது வெப்பமும் குளிரும் சமமாய், நோய் இல்லாமல், உணவும், தண்ணீரும் கிடைக்கும் காலம். மேலும், படை பலத்தையும் அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
இது அரசனுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் பொருந்தும்.