ஒவ்வொரு மனிதருடைய முகத்திலும் இரண்டு கண்கள் இருக்கின்றன.
அவை எதற்காக?
கல்வி அறிவு பெறுவதற்காகவே உள்ளன!
கல்வியறிவு பெறாதவர்கள் முகத்தில் என்ன இருக்கின்றன? அவர்கள் முகத்தில் இருப்பவை கண்கள் அல்ல புண்கள்!
அதாவது, ஒரு பொருளின் இயல்பை அறிய வேண்டுமென்றால், அதற்கு அறிவு வேண்டும். அந்த அறிவைப் பெறுவதற்கு கல்வி அவசியம் (படிப்பு முக்கியம்).
அதாவது கல்வி அறிவு இல்லாதவர், (படிக்காதவர்) எந்தப் பொருளைக் கண்ட போதிலும், அதன் தன்மையைத் தெரிந்து கொள்ள இயலாது.
படிக்காதவரை எளிதில் ஏமாற்றிவிடுகின்றனர். எனவே, கல்வி அறிவு இல்லாதவர் முகத்தில் இருப்பது புண் என்று உணர்த்தப்படுகிறது.