விவசாயிகள், நிலத்தில் விதைப்பதற்கு விதை நெல்லைச் சேமித்து வைத்திருப்பார்கள். பிறகு அதைப் பயன்படுத்துவார்கள்.
அதுபோல, உறுதி என்ற தோட்டியால், மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து இந்திரியங்களான மதயானைகளை அடக்கி ஆண்டு உலகத்திற்கு நன்மை செய்யக் கூடிய வலிமை மிக்கவர்கள் ஆவார்கள். துறவிகள் புலனடக்கியவர்களே உறுதியாக வீடு பேறடைவார்கள்.
அத்தகையவர்களே மகான்கள் என்று போற்றப்படுவார்கள்.