Raga: இந்துஸ்தான்பியாக் | Tala: ஆதி பல்லவி:பாலோடு தேன் கலந்தற்றே
பணிமொழி வாலெயிறு ஊறிய நீர் எனக்கு
அநுபல்லவி:வேலோடு வேலாக மின்னிப் பொருதும் கண்ணாள்
மேலானதாம் காதல் சிறப்புரை தரும் பெண்ணாள்
சரணம்:இறக்கவும் அவளே இருக்கவும் அவளே
என்னுயிர் என்கண் என்பதும் அவளே
மறக்க முடியாத மாதர்குல மாணிக்கம்
மனக் கோயிலில் நிறைவாள்
மணக் கோலமே விழைவாள்
சூடான பால் எனினும் பருகிட அஞ்சுவாள்
சுடுமோ தன் நெஞ்சத்தாரை என்றுமே கொஞ்சுவாள்
மூடாள் கண்ணிமையும் தேடாள் எழுதும் மையும
முறையாகும் என் வரைவு - நிறைவாக நோன்பும் கொள்வாள்